சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.118  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,
பண் - செவ்வழி (திருத்தலம் திருதிலதைப்பதி (மதிமுத்தம்) ; (திருத்தலம் அருள்தரு பொற்கொடியம்மை உடனுறை அருள்மிகு மதிமுத்தநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே, அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம் கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி, வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே. | [1] |
தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம் தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி, வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்) மதிமுத்தமே. | [2] |
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர் தொழக் கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம் திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி, மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே. | [3] |
கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு, கூவிளம், வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்) இடம் செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி, மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே. | [4] |
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித்தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள், மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே. | [5] |
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும் பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான், இடம் தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி, மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே. | [6] |
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால் தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி, மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே. | [7] |
கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய, வாய் மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே. | [8] |
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின் மிசை இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம் திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும் திலைதைப்பதி, மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே. | [9] |
புத்தர் தேரர், பொறி இல் சமணர்களும், வீறு இலாப் பித்தர் சொன்ன(ம்) மொழி கேட்கிலாத பெருமான் இடம் பத்தர், சித்தர், பணிவு உற்று இறைஞ்சும் திலதைப்பதி, மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே. | [10] |
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல், கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம் பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச் சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே. | [11] |